Sample Text

Theme images by Storman. Powered by Blogger.

Search This Blog

Pages

Tuesday, 28 June 2016

பான் கார்டு முகவரியை ஆன்லைனில் எளிமையாக மாற்றுவது எப்படி?

- No comments
ஒரு தனி நபர் அல்லது நிறுவனம் புது முகவரிக்குச் மாற்றினால், அதை உடனே பான் கார்டில் பதிவு அல்லது சரி செய்யவேண்டியது அவசியம்.
பான் கார்டில் உள்ள முகவரி வருமான வரித்துறை பதிவு செய்யப்படுவதால் இதனை உடனடியாகத் திருத்துவது சாலச்சிறந்தது. இதனை நீங்கள் எளிமையாக ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம்.
ஆன்லைனில் பான் கார்டு முகவரியைத் திருத்தும் வழிகள். இதுதோ உங்களுக்காக.. அந்த இணைய முகவரிக்குச் சென்று PAN Data Request Form என்ற தொடர்பில் மாற்றம் அல்லது திருத்தம் தொடர்பான (changes or correction) வசதியை பயன்படுத்த வேண்டும்.


இந்த விண்ணப்பத்தில் 'update communication address' என்ற கோரிக்கையில் டிக் செய்ய மறந்து விடாதீர்கள்.உங்கள் பான் கார்டில் உள்ள விவரங்களில் செய்யவேண்டிய மாற்றங்களுக்கு விண்ணப்பத்தில் அனைத்து கட்டாய விவரங்களையும் (* குறியிடப்பட்ட விவரங்கள்) பூர்த்தி செய்து மாற்றம் தேவையான இடங்களில் எதிரே இடது புறம் கொடுக்கப்பட்டிருக்கும் பெட்டியில் தேர்வு (செலக்ட்) செய்யவேண்டும்.
உங்கள் தொடர்பு முகவரி இந்தியாவிற்குள் இருந்தால் பான் கார்டை அனுப்ப ரூபாய் 105 செலுத்த வேண்டும் (93 ருபாய் மற்றும் 12.36 சதவிகிதம் சேவை வரி).
கட்டணத்தை டிமாண்ட் டிராப்ட், காசோலை, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது இணைய வங்கிதளம் மூலமாகச் செலுத்தலாம். கிரெடிட் கார்டு உபயோகத்திற்கு 2 சதவிகித கூடுதல் கட்டணம் உண்டு.
கட்டணம் செலுத்துகை முடிந்த பிறகு அதற்கான ரசீது (acknowledgement) திரையில் தெரியும். அதனை நீங்கள் உங்கள் கணினியில் பதியவோ அல்லது பிரிண்ட் செய்தோ வைத்துக்கொள்ளலாம்.
தனி நபர் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தின் இடதுபுறத்தில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் தங்களுடைய அண்மையில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங்களை ஒட்டி பாதிப் புகைப்படத்திலும் பாதி விண்ணப்பத்தில் வருமாறும் கையொப்பமிட வேண்டும்.
இந்த ரசீது அல்லது விண்ணப்பத்தைப் புகைப்படத்துடன் கையொப்பமிட்ட பின்னர் (தனி நபர்களுக்கு மட்டும்) அதனுடன் கட்டணத்திற்கான டிடி அல்லது காசோலை (ஆன்லைனில் செலுத்தாதமல் நேரடியாகச் செலுத்த விரும்புவோர்) மற்றும் தற்போதுள்ள பான்கார்டின் நகல், முகவரி, பிறந்த தேதி ஆகியவற்றிற்கான அடையாளச்சான்று ஆகியவற்றுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவேண்டும்.

NSDL e-Governance Infrastructure Limited, 5th floor,
Mantri Sterling, Plot No. 341,
Survey No. 997/8, Model Colony,
Near Deep Bungalow Chowk,
Pune - 411016'.
பின் குறிப்பு: நீங்கள் அனுப்பும் விண்ணப்ப கவரின் மீது 'APPLICATION FOR PAN CHANGE REQUEST-Acknowledgment Number' என்று குறிப்பிடவும் (உதாரணம்: APPLICATION FOR PAN CHANGE REQUEST-881010200000097).


💀எச்சரிக்கை – ஆபாசப்படம் பார்க்கும்போது பேஸ்புக்கை அவசியம் லாக்-அவுட் செய்யுங்கள்..!

- No comments
முன்னேற்றம் எந்த விதமான துறையையும் விட்டுவைக்கவில்லை. பாலுணர்வுக் கிளர்ச்சியம்’ அதாவது பார்னோகிராஃபி (Pornography) என்பது சரியானதா..? தவறானதா..? என்று விவாதம் செய்வதால் எதுவும் இங்கே மாறிவிடப் போவதில்லை என்பது உங்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும்.
அதனால், ஆபாசப்படம் பார்க்கும்போது ஏன் உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை எப்போதுமே லாக்-அவுட் செய்ய வேண்டும் விளக்கம் கொடுத்து விடுகிறோம்..!

லாக்-இன் :
இண்டர்நெட்டில் ஆபாசப்படங்கள் பார்க்கும் போது உங்கள் முகநூல் அக்கவுண்ட் லாக்-இன்’னில் இருந்தால் நீங்கள் டிராக் செய்யப்படுவீர்கள்..!

நடத்தை :
உங்கள் முகநூல் அக்கவுண்டின் பேஸ்பூக் ப்ளக்டு-இன் பட்டன், லைக் பட்டன், ஷேர் பட்டன் போன்ற அம்சங்களில் இருந்து கொண்டு நீங்கள் ஆபாச வலைதளத்தில் இருந்தால் உங்கள் நடத்தை கண்காணிக்கப்படும்.

லைக் மற்றும் ஷேர் :
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு லைக் மற்றும் ஷேர் பட்டன்கள் அதனை பயன்படுத்தும் மக்களை கண்காணிக்காது என்று உறுதியளிக்கப்பட்டது ஆனால் இப்போது அது மாறிவிட்டது.

தகவல்கள் :
“விளம்பரங்களை இலக்குகளாக வைத்து மக்களின் சமூக விடயங்களை கண்காணிக்க மாட்டோம், மேலும் சேகரிக்கப் படும் தகவல்கள் எல்லாமே 90 நாட்களில் அழிக்கப்பட்டுவிடும். பணத்திற்காக விற்கப்படமாட்டாது” என்று 2001 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உறுதிகள் தற்போது காணாமல் போய் உள்ளன.
ட்ராக் :
தற்போது உங்களை ‘ட்ராக்’ செய்வது மட்டுமின்றி உடன் நீங்கள் எந்த வலைதளத்தில் உள்ளீர்கள், எவ்வளவு அதிகமாக குறிப்பிட்ட வலைதளத்தில் உள்ளீர்கள் என்பதை வைத்து உங்கள் நடத்தையையும் சேர்த்து கண்காணிக்கின்றனர்.

புதிய தனியுரிமை கொள்கை :
சமீபத்தில் புதிய தனியுரிமை கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது அதில் “எங்களின் சேவையின் கீழ் உங்களுக்கு கிடைக்கும், நீங்கள் பார்வையிடும் மூன்றாம் தரப்பு வலைத்தளங்களின் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.

அனைத்துமே சேகரிக்கப்படும் :
அதாவது நீங்கள் பார்வையிடும் இணையதளங்கள் மற்றும் ஆப்ஸ் பற்றிய தகவல், அந்தந்த வலைத்தளங்கள் மற்றும் ஆப்ஸ்களில் நீங்கள் பயன்படுத்தும் எங்கள் சேவைபற்றிய தகவல்கள், உடன் உங்களுக்கு சேவை வழங்கும் வலைத்தளங்களின் டெவெலப்பர் மற்றும் பப்ளிஷர் விவரங்கள் என அனைத்துமே சேகரிக்கப்படும்.

வகை :
முக்கியமாக ஆபாச வலைத்தளங்கள் மட்டும் கண்காணிக்க படுவதில்லை, நாம் அணுகும் அனைத்து வகையான வலைத்தளங்கள் மற்றும் ஆப்ஸ்களும் கண்காணிக்கப்படுகிறது என்பது குறிப்பித்தக்கது.

மறுபக்கம் :
நிறுவனத்தின் ப்ரைவசி பாலிசிகள் இவ்வளவு சீக்கிரம் நிலையை மாற்றிக் கொள்கின்றன என்பது சற்று தொந்தரவாக இருக்கிறது என்பது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் நுகர்வோர்கள் மற்றும் பயனாளிகள் அனைவரும் தெளிவாக செயல் பட வேண்டியதும் நிதர்சனம் தான்.

Monday, 27 June 2016

10ஜிபி 4ஜி டேட்டா ரூ.93 மட்டுமே, ஜியோ அதிரடி.!!

- No comments
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது 4ஜி சேவையை வழங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி அந்நிறுவனம் தனது சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நெட்வர்க் பயன்படுத்தி 4ஜி சேவைகளை வழங்கவும், முதற்கட்டமாக சுமார் 10ஜிபி 4ஜி டேட்டாவினை ரூ.93க்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு அந்நிறுவனம் எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது..   அடுத்த வாரம் முதல் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் 4ஜி நெட்வர்க் பயன்படுத்தி சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களுக்கு 4ஜி டேட்டா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.4ஜி சேவைக்கு அப்கிரேடு செய்ய ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்தச் சலுகையை பயன்படுத்தத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக பிடிஐ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 80 லட்சம் RCom சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களில் சுமார் 90% பேர் 4ஜி சேவைக்கு அப்கிரேடு செய்ய முன்பதிவு செய்திருப்பதாகவும் அந்நிறுவன தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துவக்கத்தில் 10 ஜிபி 4ஜி டேட்டாவினை ரூ.93 வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்சமயம் சந்தையில் கிடைப்பதில் மிகக்குறைந்த விலையில் 4ஜி சேவை வழங்கும் நிறுவனமாக இருக்கின்றது.

ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஏற்ப ரூ.93 முதல் ரூ.97 வரை 10ஜிபி 4ஜி டேட்டாவின் கட்டணங்கள் மாறுபட வாய்ப்புகள் இருக்கின்றதாக RCom இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதற்கட்ட 4ஜி சேவைகளை வழங்க மும்பை, தில்லி, கொல்கத்தா, குஜராத், ஆந்திர பிரதேசம், மகாராஷ்ட்ரா, பஞ்சாப், கிழக்கு மற்றும் மேற்கு உத்திர பிரதேசம், மத்திய பிரதேஷ் மற்றும் பீகார் உள்ளிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அந்நிறுவனம் தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் அனுமதி பெற்று ஜூலை மாத இறுதியில் 4ஜி சேவையை வழங்க இருக்கின்றது...

Thursday, 23 June 2016

5 நிமிடத்தில் ஆதார் கார்டில் உள்ள பிழைகளை திருத்த எளிய முறை!

- No comments
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும். அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.


ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.


2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.

3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.

ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.

ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:

1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.

2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.

3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.

அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.

ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.

6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.

7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்

நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்